மத்வாசாரியார் த்வைத வேதாந்தத்தை வகுத்தவர். அவர் கர்நாடகாவிலுள்ள உடுப்பியைச் சார்ந்தவர். வர்காரி என்ற சொல் பக்தர்களுக்காக பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கும் விட்டோபா என்ற விட்டலனைக் காண பந்தர்பூர் செல்வதற்காக கனவு கண்டு கொண்டிருக்கும் வழிப்போக்கன் என்பதாகும். வர்காரி பாரம்பர்யம் ஞானதேவுடன் (1275-96) ஆரம்பித்தது. அவர் ஞானேஷ்வரி என்ற, மக்களால் பெரிதும் போற்றப்பட்ட பகவத் கீதையின் சம்ஸ்கிருத விளக்கவுரையை எழுதியவர். அவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு சீர்திருத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவருக்குப்பின் பதிமூன்றிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் முக்தாபாய், நாம்தேவ், ஜனாபாய், ஏக்நாத், துக்காராம் போன்ற பலர் வர்காரி பரம்பரையில் தோன்றினார்கள். ஞானதேவைப்போலவே அவர்களும் சிறந்த சீர்திருத்தவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகவும் சமய சான்றோர்களாகவும் விளங்கினார்கள். அவர்கள் பெண்களையும் தாழ்ந்த ஜாதிக்காரர்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டார்கள். அனைவருக்கும் பாரபட்சமற்ற முறையில் தொண்டு செய்தனர். அவர்களது மராத்திய கவிதைகள் கடவுள் மீது அவர்களுக்கிருந்த ஆழ்ந்த மனப்பூர்வமான பக்தியையும் தத்துவ ஞானத்தையும் விளக்கின.
ஜனாபாய் தனது கவிதையில் “ நான் கடவளையே உண்கிறேன், கடவுளையே அருந்துகிறேன், கடவுள் மீதே உறங்குகிறேன், கடவுளையே வாங்குகிறேன், கடவுளையே எண்ணுகிறேன், கடவுளுடனே அளவளாவுகிறேன், வெற்றிடத்திலும் கடவுள் இல்லாமலில்லை” என்று எழுதினார்.
இந்தப் படம் விக்கிமீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது. வார்கிகளின் வருடாந்திர புனித யாத்திரையின் பொழுது பி.ஆர்.உதயகுமாரால் பிடிக்கப்பட்ட புகைப்படம்.
மத்வாசாரியார் த்வைத வேதாந்தத்தை வகுத்தவர். அவர் கர்நாடகாவிலுள்ள உடுப்பியைச் சார்ந்தவர். வர்காரி என்ற சொல் பக்தர்களுக்காக பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கும் விட்டோபா என்ற விட்டலனைக் காண பந்தர்பூர் செல்வதற்காக கனவு கண்டு கொண்டிருக்கும் வழிப்போக்கன் என்பதாகும். வர்காரி பாரம்பர்யம் ஞானதேவுடன் (1275-96) ஆரம்பித்தது. அவர் ஞானேஷ்வரி என்ற, மக்களால் பெரிதும் போற்றப்பட்ட பகவத் கீதையின் சம்ஸ்கிருத விளக்கவுரையை எழுதியவர். அவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு சீர்திருத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவருக்குப்பின் பதிமூன்றிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் முக்தாபாய், நாம்தேவ், ஜனாபாய், ஏக்நாத், துக்காராம் போன்ற பலர் வர்காரி பரம்பரையில் தோன்றினார்கள். ஞானதேவைப்போலவே அவர்களும் சிறந்த சீர்திருத்தவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகவும் சமய சான்றோர்களாகவும் விளங்கினார்கள். அவர்கள் பெண்களையும் தாழ்ந்த ஜாதிக்காரர்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டார்கள். அனைவருக்கும் பாரபட்சமற்ற முறையில் தொண்டு செய்தனர். அவர்களது மராத்திய கவிதைகள் கடவுள் மீது அவர்களுக்கிருந்த ஆழ்ந்த மனப்பூர்வமான பக்தியையும் தத்துவ ஞானத்தையும் விளக்கின.
ஜனாபாய் தனது கவிதையில் “ நான் கடவளையே உண்கிறேன், கடவுளையே அருந்துகிறேன், கடவுள் மீதே உறங்குகிறேன், கடவுளையே வாங்குகிறேன், கடவுளையே எண்ணுகிறேன், கடவுளுடனே அளவளாவுகிறேன், வெற்றிடத்திலும் கடவுள் இல்லாமலில்லை” என்று எழுதினார்.
இந்தப் படம் விக்கிமீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது. வார்கிகளின் வருடாந்திர புனித யாத்திரையின் பொழுது பி.ஆர்.உதயகுமாரால் பிடிக்கப்பட்ட புகைப்படம்.