ஆயுர் என்றால் ஆயுட்காலம். வேதம் என்றால் அறிவு. ஆயுர்வேதம் என்பது வாழ்க்கையின் அறிவியல். இது மகிழ்ச்சியான, திருப்திகரமான மற்றும் வளம்மிக்க ஆயுட்காலம் பெறுவதற்கு வழிவகுக்கிறது. இது நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நோயற்ற வாழவுக்கும் வழிவகுக்கிறது.
ஆயுர்வேதம், மனிதர்கள் (மனுஷ்ய ஆயுர்வேதம்), தாவரங்கள் (விருக்ஷ ஆயுர்வேதம்) மற்றும் விலங்குகள் (மிருக ஆயுர்வேதம்) போன்ற அனைத்து உயிர்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டுள்ளது.
விருக்ஷ ஆயுர்வேதம் (தோராயமாக கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய) அக்னிபுராணத்தின் ஒரு பகுதியாகும். இதுதான் ஆயுர்வேத தாவரவியல் பற்றிய மிகவும் பழமையான ஆய்வுக் கட்டுரையுமாகும். ஷாலிஹோத்ரா (கி..மு 3 ஆம் நூற்றாண்டு) இந்தியாவில் கால்நடை அறிவியலின் தந்தையாகக் கருதப்படுபவர்.
நன்கு அறியப்பட்ட மனுஷ்ய ஆயுர்வேதமே, இந்த புதிரின் முக்கிய நோக்கமாகும். இங்குள்ள விக்கிமீடியாவின் படம், 1825 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவர் ஒருவர் நோயாளியை பரிசோதிப்பதைக் காட்டும் ஓவியமாகும்.
ஆதாரம்: “ஆயுர்வேத அறிமுகம்” என்ற NCERT-யின் பதினொன்றாம் வகுப்பிற்கான புத்தகம்.
ஆயுர் என்றால் ஆயுட்காலம். வேதம் என்றால் அறிவு. ஆயுர்வேதம் என்பது வாழ்க்கையின் அறிவியல். இது மகிழ்ச்சியான, திருப்திகரமான மற்றும் வளம்மிக்க ஆயுட்காலம் பெறுவதற்கு வழிவகுக்கிறது. இது நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நோயற்ற வாழவுக்கும் வழிவகுக்கிறது.
ஆயுர்வேதம், மனிதர்கள் (மனுஷ்ய ஆயுர்வேதம்), தாவரங்கள் (விருக்ஷ ஆயுர்வேதம்) மற்றும் விலங்குகள் (மிருக ஆயுர்வேதம்) போன்ற அனைத்து உயிர்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டுள்ளது.
விருக்ஷ ஆயுர்வேதம் (தோராயமாக கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய) அக்னிபுராணத்தின் ஒரு பகுதியாகும். இதுதான் ஆயுர்வேத தாவரவியல் பற்றிய மிகவும் பழமையான ஆய்வுக் கட்டுரையுமாகும். ஷாலிஹோத்ரா (கி..மு 3 ஆம் நூற்றாண்டு) இந்தியாவில் கால்நடை அறிவியலின் தந்தையாகக் கருதப்படுபவர்.
நன்கு அறியப்பட்ட மனுஷ்ய ஆயுர்வேதமே, இந்த புதிரின் முக்கிய நோக்கமாகும். இங்குள்ள விக்கிமீடியாவின் படம், 1825 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவர் ஒருவர் நோயாளியை பரிசோதிப்பதைக் காட்டும் ஓவியமாகும்.
ஆதாரம்: “ஆயுர்வேத அறிமுகம்” என்ற NCERT-யின் பதினொன்றாம் வகுப்பிற்கான புத்தகம்.