ரெசாங் லாவில் நடந்த சண்டை, இந்திய ராணுவ வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு நிகழ்வு ஆகும். இந்த சண்டையில், 13வது குமாவுன் பிரிவை சேர்ந்த மேஜர் ஷைத்தான் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் அசாத்திய வீரத்தை வெளிப்படுத்தினர். அவரது படை மற்ற இந்திய இராணுவ நிலைகளிலிருந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதியைப் பாதுகாத்து வந்தது. நவம்பர் 18, 1962 அன்று சீன வீரர்கள் இந்த இடத்தை கடுமையான பீரங்கித் தாக்குதலுக்கு உட்படுத்தினர். அவர்கள் தொடர்ச்சியான பல அலைகளில் அபரிமிதமான வலிமையுடன் தாக்கினர். ஆனாலும் மேஜர் ஷைத்தான் சிங்கும் அவரது படையும் களத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பெரும் தனிப்பட்ட ஆபத்து இருந்தபோதும், தனது படைப்பிரிவின் ஒவ்வொரு குழுவிற்கும் சென்று அவர்களை சரியாக வழிநடத்தியும் ஊக்குவித்தும் வந்தார். இதனால் அவரது படை, பல தாக்குதல் அலைகளை முறியடித்தது. ஆனால் இறுதியில் மேஜர் ஷைத்தான் சிங் படுகாயமடைந்து இருந்தாலும், அவர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வழிநடத்தினார். இந்த ஒற்றைச் சண்டையில் இந்தியா 114 வீரர்களை இழந்தது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனர்கள் நான்கு அல்லது ஐந்து மடங்கு வீரர்களை இழந்தனர்.
இறுதியாக, மேஜர் ஷைத்தான் சிங் காயங்களால் வீழ்ந்தபோது, அவரது வீரர்கள் அவரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர் அதை மறுத்து, தனது வீரர்களை தொடர்ந்து சண்டையிட ஆணையிட்டார்.
சண்டை முடிந்த பிறகு , போர்க்களத்தை மீண்டும் பார்வையிடப்பட்டபோது, வீரர்கள் தங்கள் அகழிகளில் ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு காணப்பட்ட நிலையிலேயேயும், வெடிபொருள் வீரர் கையில் ஒரு வெடிகுண்டுடனேயே இறந்ததிலிருந்தும் இந்த சண்டை எவ்வளவு உக்கிரமாக நடந்திருக்கக்கூடும் என அறிந்து கொள்ள முடிந்தது . ரெசாங் லாவில் நடந்த சண்டையில், நமது வீரர் வெளிப்படுத்திய வீர சாகசத்திற்கு மேஜர் ஷைத்தான் சிங்கிற்கு ஒரு பரம் வீர் சக்ரா விருது, மற்ற வீரர்களுக்கு எட்டு வீர் சக்ரா விருதுகள், நான்கு சேனா பதக்கங்கள் மற்றும் ஒரு ‘பாராட்டுப் பட்டியல்’ விருது வழங்கப்பட்டன.
ரெசாங் லாவில் நடந்த சண்டை, இந்திய ராணுவ வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு நிகழ்வு ஆகும். இந்த சண்டையில், 13வது குமாவுன் பிரிவை சேர்ந்த மேஜர் ஷைத்தான் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் அசாத்திய வீரத்தை வெளிப்படுத்தினர். அவரது படை மற்ற இந்திய இராணுவ நிலைகளிலிருந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதியைப் பாதுகாத்து வந்தது. நவம்பர் 18, 1962 அன்று சீன வீரர்கள் இந்த இடத்தை கடுமையான பீரங்கித் தாக்குதலுக்கு உட்படுத்தினர். அவர்கள் தொடர்ச்சியான பல அலைகளில் அபரிமிதமான வலிமையுடன் தாக்கினர். ஆனாலும் மேஜர் ஷைத்தான் சிங்கும் அவரது படையும் களத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பெரும் தனிப்பட்ட ஆபத்து இருந்தபோதும், தனது படைப்பிரிவின் ஒவ்வொரு குழுவிற்கும் சென்று அவர்களை சரியாக வழிநடத்தியும் ஊக்குவித்தும் வந்தார். இதனால் அவரது படை, பல தாக்குதல் அலைகளை முறியடித்தது. ஆனால் இறுதியில் மேஜர் ஷைத்தான் சிங் படுகாயமடைந்து இருந்தாலும், அவர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வழிநடத்தினார். இந்த ஒற்றைச் சண்டையில் இந்தியா 114 வீரர்களை இழந்தது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனர்கள் நான்கு அல்லது ஐந்து மடங்கு வீரர்களை இழந்தனர்.
இறுதியாக, மேஜர் ஷைத்தான் சிங் காயங்களால் வீழ்ந்தபோது, அவரது வீரர்கள் அவரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர் அதை மறுத்து, தனது வீரர்களை தொடர்ந்து சண்டையிட ஆணையிட்டார்.
சண்டை முடிந்த பிறகு , போர்க்களத்தை மீண்டும் பார்வையிடப்பட்டபோது, வீரர்கள் தங்கள் அகழிகளில் ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு காணப்பட்ட நிலையிலேயேயும், வெடிபொருள் வீரர் கையில் ஒரு வெடிகுண்டுடனேயே இறந்ததிலிருந்தும் இந்த சண்டை எவ்வளவு உக்கிரமாக நடந்திருக்கக்கூடும் என அறிந்து கொள்ள முடிந்தது . ரெசாங் லாவில் நடந்த சண்டையில், நமது வீரர் வெளிப்படுத்திய வீர சாகசத்திற்கு மேஜர் ஷைத்தான் சிங்கிற்கு ஒரு பரம் வீர் சக்ரா விருது, மற்ற வீரர்களுக்கு எட்டு வீர் சக்ரா விருதுகள், நான்கு சேனா பதக்கங்கள் மற்றும் ஒரு ‘பாராட்டுப் பட்டியல்’ விருது வழங்கப்பட்டன.