இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவின் சுயாட்சிக்கு வக்கீலாக இருந்தவர்,
“கீதையில் இருக்கும் சூக்ஷ்ம (ரகசிய)
விஷயத்தை, அறிவுரையை நாம் இன்னும் வெளியில் கொண்டுவரவேண்டும்” என்றார். அவர் யார்?
அனி பெசன்ட் அம்மையார் (1847_1933), சமத்துவம், பெண்களின் உரிமைகள், குடும்பக்கட்டுப்பாடு, மேலும் வியாபார தொழிற்சங்கவாதம் போன்ற கோட்பாடுகளை மக்களிடைய பரப்ப மிகத் தீவிரமாக இருந்தார். அவர்கள் இறையியல் சமூகத்தை நிறுவுவதில் மிக அதிக பங்கெடுத்தார். (Homerule league )தன்னாட்சி இயக்கம்என்பதை துவங்கினார். இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். இவர் கீதையை இரண்டு வித மொழிபெயர்ப்பில் படித்துள்ளார். இரண்டு சொற்பொழிவுத் தொடர்ளையும் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு கீதையில் வெளிப்படுத்தப்படாத பல தத்துவங்களும் தர்மங்களும் இருப்பதாக எண்ணினார். தான் வெளிப்படுத்தவேண்டும் என்று நினைத்த கீதையின் ரகசியங்களை கிருத்துவ இறைஇயல் வார்த்தைகளை பிரயோகித்து மக்களிடையே பரப்ப நினைத்தார். மேலும் யோகாவை மதத்துடன் சம்மந்தப்படுத்தாமல் அது உலகம் முழுவதும் பயிற்சி செய்ய வேண்டிய ஆன்மீக அனுபவம் என்கிறார். கீதை, யோக நிலை அடைய உதவும் வேதம், உலகத்தின் தெய்வீகச்சட்டத்துடன் நல்லிணக்கமாக இருக்கிறது. கீதை ஒருவன் தெய்வீக வாழ்வை நல்லிணக்கத்துடன் நடத்தவும் .தனக்குள் இருக்கும் உயர்ந்த தெய்வீகத்துடன் இணையவும் அவனை வழி நடத்திச்செல்கிறது. குருக்ஷேத்ரயுத்தம் ஒவ்வொருவனுக்குள்ளும் நடந்துகொண்டிருக்கும் ஆத்மபோராட்டம். இதில் அர்ஜூனன் தத்தளிக்கும் ஆத்மாவையும் க்ருஷ்ணர் தெய்வீக நல்லாத்மாவின் சின்னமாகும். இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் மட்டும் கட்டுப்பட்டதல்ல கீதை. உலகம் முழுவதும் இருக்கும் மக்களையும் உன்னத ஆழ்நிலையை அறிய பல வகையில் பாடுபடும் அனைத்து மக்களுக்கும் கீதை ஒரு உத்தம பாடமாகும்.
மூலம் ,Angelika Malinar, ‘ The Great Unveiling : Annie Besant and the Bhagvad Gita’, University of Zurich
அனி பெசன்ட் அம்மையார் (1847_1933), சமத்துவம், பெண்களின் உரிமைகள், குடும்பக்கட்டுப்பாடு, மேலும் வியாபார தொழிற்சங்கவாதம் போன்ற கோட்பாடுகளை மக்களிடைய பரப்ப மிகத் தீவிரமாக இருந்தார். அவர்கள் இறையியல் சமூகத்தை நிறுவுவதில் மிக அதிக பங்கெடுத்தார். (Homerule league )தன்னாட்சி இயக்கம்என்பதை துவங்கினார். இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். இவர் கீதையை இரண்டு வித மொழிபெயர்ப்பில் படித்துள்ளார். இரண்டு சொற்பொழிவுத் தொடர்ளையும் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு கீதையில் வெளிப்படுத்தப்படாத பல தத்துவங்களும் தர்மங்களும் இருப்பதாக எண்ணினார். தான் வெளிப்படுத்தவேண்டும் என்று நினைத்த கீதையின் ரகசியங்களை கிருத்துவ இறைஇயல் வார்த்தைகளை பிரயோகித்து மக்களிடையே பரப்ப நினைத்தார். மேலும் யோகாவை மதத்துடன் சம்மந்தப்படுத்தாமல் அது உலகம் முழுவதும் பயிற்சி செய்ய வேண்டிய ஆன்மீக அனுபவம் என்கிறார். கீதை, யோக நிலை அடைய உதவும் வேதம், உலகத்தின் தெய்வீகச்சட்டத்துடன் நல்லிணக்கமாக இருக்கிறது. கீதை ஒருவன் தெய்வீக வாழ்வை நல்லிணக்கத்துடன் நடத்தவும் .தனக்குள் இருக்கும் உயர்ந்த தெய்வீகத்துடன் இணையவும் அவனை வழி நடத்திச்செல்கிறது. குருக்ஷேத்ரயுத்தம் ஒவ்வொருவனுக்குள்ளும் நடந்துகொண்டிருக்கும் ஆத்மபோராட்டம். இதில் அர்ஜூனன் தத்தளிக்கும் ஆத்மாவையும் க்ருஷ்ணர் தெய்வீக நல்லாத்மாவின் சின்னமாகும். இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் மட்டும் கட்டுப்பட்டதல்ல கீதை. உலகம் முழுவதும் இருக்கும் மக்களையும் உன்னத ஆழ்நிலையை அறிய பல வகையில் பாடுபடும் அனைத்து மக்களுக்கும் கீதை ஒரு உத்தம பாடமாகும்.
மூலம் ,Angelika Malinar, ‘ The Great Unveiling : Annie Besant and the Bhagvad Gita’, University of Zurich