புத்த கலாசாரத்தின்படி, பலி தன்னுடைய வாழ்க்கைக் கதையை அவலோகிதேஸ்வரிடம் விவரிக்கிறான். அவன் தன்னை ஓர் ஆணவம் கொண்ட அரசனென்று கூறிக் கொள்கிறான். அவன் கணக்கிலடங்கா மன்னர்களையும், பிராமணர்களையும் தான் நடத்தும் ஒரு யாகத்திற்கு அழைக்கிறான். அவர்களனைவரும் தன் முன்பு கூடியதால் அவன் தன்னைத்தானே தலைவனென்று பெருமை கொள்கிறான். அவன் அவர்களுடைய பெண்களைக் கொடுமைப்படுத்தியதுடன் சிறுவர் சிறுமியரையும் கொலை செய்கிறான். க்ஷத்திரியர்களையும் பாண்டவர்களையும் கௌரவர்களையும் சிறைப்படுத்தினான். அதன் பின் நாராயணனைத் தேடுகிறான். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு யாகத்தைத் தொடங்குகிறான். அப்பொழுது நாராயணன், தசரதபுத்திரனாக (இராமனாக) தோன்றி பாண்டவர்களையும் கௌரவர்களையும் விடுவிக்கிறார். பிறகு தசரதபுத்திரர் குள்ள வடிவம் கொண்டு யாக பூமிக்கு வந்து இரண்டு அடி நிலம் கேட்கிறார். பலி அவருக்கு மூன்று அடி நிலம் வழங்குகிறான். இரண்டு அடியால் உலகமளந்த பிறகு, பலியால் மூன்றாவது அடிக்கு நிலம் தர இயலவில்லை. அதனால் தசரதபுத்திரர் அவனை யாக பூமியிலிருந்து வெளியேற்றி பாதாளலோகம் அனுப்புகிறார். பாண்டவர்களும், கௌரவர்களும் மற்ற க்ஷத்திரியர்களும் அவனது அனைத்து செல்வத்தையும் எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்.
பலி இக்கதையை அவலோகிதேஸ்வரரிடம் கூறி, தான் வழங்கிய துரதிர்ஷ்டவசமான காணிக்கையால் அடிமைப்பட்டதாக கூறுகிறான். அவலோகிதேஸ்வரர் பலிக்கு தர்மத்தை போதித்து அவன் நியாயமான அசுர அரசனாக வாழ்வானென்று கூறுகிறார். அவன் சத்யஞானம் அடைந்தவனாவான் (ததகாத்தா – புத்த ஞானி) என்றும் பரிபூரண ஞானம் அடைவானென்றும் உரைக்கிறார். இவ்வாறு புத்த கலாசாரம் புத்த மதத்துடன் வாமன அவதாரம் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தையும் இணைத்தே கூறுகின்றது.
ஆதாரம்: www.wisdom-lib.org, கரண்டவ்யுஹா சூத்ரம்
Picture Credit: Vrindavan Das
புத்த கலாசாரத்தின்படி, பலி தன்னுடைய வாழ்க்கைக் கதையை அவலோகிதேஸ்வரிடம் விவரிக்கிறான். அவன் தன்னை ஓர் ஆணவம் கொண்ட அரசனென்று கூறிக் கொள்கிறான். அவன் கணக்கிலடங்கா மன்னர்களையும், பிராமணர்களையும் தான் நடத்தும் ஒரு யாகத்திற்கு அழைக்கிறான். அவர்களனைவரும் தன் முன்பு கூடியதால் அவன் தன்னைத்தானே தலைவனென்று பெருமை கொள்கிறான். அவன் அவர்களுடைய பெண்களைக் கொடுமைப்படுத்தியதுடன் சிறுவர் சிறுமியரையும் கொலை செய்கிறான். க்ஷத்திரியர்களையும் பாண்டவர்களையும் கௌரவர்களையும் சிறைப்படுத்தினான். அதன் பின் நாராயணனைத் தேடுகிறான். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு யாகத்தைத் தொடங்குகிறான். அப்பொழுது நாராயணன், தசரதபுத்திரனாக (இராமனாக) தோன்றி பாண்டவர்களையும் கௌரவர்களையும் விடுவிக்கிறார். பிறகு தசரதபுத்திரர் குள்ள வடிவம் கொண்டு யாக பூமிக்கு வந்து இரண்டு அடி நிலம் கேட்கிறார். பலி அவருக்கு மூன்று அடி நிலம் வழங்குகிறான். இரண்டு அடியால் உலகமளந்த பிறகு, பலியால் மூன்றாவது அடிக்கு நிலம் தர இயலவில்லை. அதனால் தசரதபுத்திரர் அவனை யாக பூமியிலிருந்து வெளியேற்றி பாதாளலோகம் அனுப்புகிறார். பாண்டவர்களும், கௌரவர்களும் மற்ற க்ஷத்திரியர்களும் அவனது அனைத்து செல்வத்தையும் எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்.
பலி இக்கதையை அவலோகிதேஸ்வரரிடம் கூறி, தான் வழங்கிய துரதிர்ஷ்டவசமான காணிக்கையால் அடிமைப்பட்டதாக கூறுகிறான். அவலோகிதேஸ்வரர் பலிக்கு தர்மத்தை போதித்து அவன் நியாயமான அசுர அரசனாக வாழ்வானென்று கூறுகிறார். அவன் சத்யஞானம் அடைந்தவனாவான் (ததகாத்தா – புத்த ஞானி) என்றும் பரிபூரண ஞானம் அடைவானென்றும் உரைக்கிறார். இவ்வாறு புத்த கலாசாரம் புத்த மதத்துடன் வாமன அவதாரம் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தையும் இணைத்தே கூறுகின்றது.
ஆதாரம்: www.wisdom-lib.org, கரண்டவ்யுஹா சூத்ரம்
Picture Credit: Vrindavan Das