ஆங்கில ஆட்சியாளர் இடப்பெயர்வு விவசாயத்தை ஆதரிக்கவில்லை. மிகவும் கடினமான காட்டழிப்பு சட்டங்களை அமல் படுத்தினர். மேலும் இடைத்தரகர் காட்டு பல்பொருள் வர்த்தகத்தை அனைத்தையும் கைப் பற்றினார்கள்.. இதனால் வெகுண்ட காட்டுவாசிகள் அடுத்தடுத்து புரட்சிகள் செய்தனர். கோல் (1831-
32 ) சந்தால் (1855-56 )அதை தொடர்ந்து மிகவும் உறுதியான பிர்ஸாமுண்டாவின் புரட்சி என பல கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன . பல ஆதிவாசிகளின் பேராதரவுடன் பிர்ஸா முண்டா தன் முயற்சியில் ஈடுபட்டார் . அவருக்கு ஏதோ அற்புத சக்திகள் இருப்பதாக மக்கள் கருதினர் . அவரே தன்னை கடவுள் எனவும் தன்னை பகவான் என நம்புபவர்களை காப்பாற்றவே இறைவன் தன்னை அமர்த்தி இருப்பதாக ப்ரகடனப்படுத்தினார். மறைப்பணியாளர்களால் நடத்தப்பட்ட பள்ளியில் படித்து நன்மை அடைந்த முதல் காட்டுவாசியான இவர் ,,வைஷ்ணவ வழிபாட்டை உயர்த்திக் காட்டினார் . மக்களுக்கு தூய்மையையும் பணிவையும் வலியுறுத்தினார் மக்களை ராவண (ஆங்கில )ராஜ்ஜியத்தை அழித்து தங்கள் பெருமையை மீட்டுக் கொள்ள ஊக்கப்படுத்தினார் .ராணி விக்டோரியாவை மண்டோதரி (ராவணன் மனைவி )என அழைத்தார்..இவர் 1900 காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் .அதற்கு பின் இந்த இயக்கம் நலிவுற்றது . அவரது போதனைகளை அவரை பின்பற்றுபவர்கள் பாதுகாத்து அதனை பிர்ஸெய்ட் எனும் ஒரு புதிய தத்துவமாக பின்பற்றப்படுகிறது.
விக்கிப்பீடியா படம் ஆங்கிலேயர் காவலில் பிர்ஸாமுண்டா.
Sourcehttps://ncert.nic.in/textbook/pdf/hess204.pdf
ஆங்கில ஆட்சியாளர் இடப்பெயர்வு விவசாயத்தை ஆதரிக்கவில்லை. மிகவும் கடினமான காட்டழிப்பு சட்டங்களை அமல் படுத்தினர். மேலும் இடைத்தரகர் காட்டு பல்பொருள் வர்த்தகத்தை அனைத்தையும் கைப் பற்றினார்கள்.. இதனால் வெகுண்ட காட்டுவாசிகள் அடுத்தடுத்து புரட்சிகள் செய்தனர். கோல் (1831-
32 ) சந்தால் (1855-56 )அதை தொடர்ந்து மிகவும் உறுதியான பிர்ஸாமுண்டாவின் புரட்சி என பல கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன . பல ஆதிவாசிகளின் பேராதரவுடன் பிர்ஸா முண்டா தன் முயற்சியில் ஈடுபட்டார் . அவருக்கு ஏதோ அற்புத சக்திகள் இருப்பதாக மக்கள் கருதினர் . அவரே தன்னை கடவுள் எனவும் தன்னை பகவான் என நம்புபவர்களை காப்பாற்றவே இறைவன் தன்னை அமர்த்தி இருப்பதாக ப்ரகடனப்படுத்தினார். மறைப்பணியாளர்களால் நடத்தப்பட்ட பள்ளியில் படித்து நன்மை அடைந்த முதல் காட்டுவாசியான இவர் ,,வைஷ்ணவ வழிபாட்டை உயர்த்திக் காட்டினார் . மக்களுக்கு தூய்மையையும் பணிவையும் வலியுறுத்தினார் மக்களை ராவண (ஆங்கில )ராஜ்ஜியத்தை அழித்து தங்கள் பெருமையை மீட்டுக் கொள்ள ஊக்கப்படுத்தினார் .ராணி விக்டோரியாவை மண்டோதரி (ராவணன் மனைவி )என அழைத்தார்..இவர் 1900 காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் .அதற்கு பின் இந்த இயக்கம் நலிவுற்றது . அவரது போதனைகளை அவரை பின்பற்றுபவர்கள் பாதுகாத்து அதனை பிர்ஸெய்ட் எனும் ஒரு புதிய தத்துவமாக பின்பற்றப்படுகிறது.
விக்கிப்பீடியா படம் ஆங்கிலேயர் காவலில் பிர்ஸாமுண்டா.
Sourcehttps://ncert.nic.in/textbook/pdf/hess204.pdf