92

நாக பஞ்சமி வினாடி-வினா

இன்றைய (17-08-2026) சிறப்பு நாக பஞ்சமி; அதற்கான வினாடி-வினாவிற்கு உங்களை வரவேற்கிறோம்! — நமது நாட்டின் கலாசார வேர்களையும் குறியீட்டு முறைகளையும் தொன்மையான யஜுர்வேத காலத்தைய துடிப்பான திருவிழாக்கள் முதல் கேரளம் மற்றும் இமயமலை பிராந்தியங்களில் நடைபெறும் பாரம்பரிய நாக வழிபாடுகளையும் இன்றளவும் தொடரும் மரபுகளையும் இதில் கண்டறிவோம்.

G. ரவீந்திரன் நாயர் எழுதிய நாக வழிபாட்டின் பண்டைய எடுத்துக்காட்டுகளுடன் கூடிய புத்தகத்தின் மூலம் நாமறிந்த பாரம்பரியத்தின் செறிவுகளை சற்றே சோதித்துக் கொள்வோம்.

1. இந்த பிரபஞ்சத்தின் சுமையை எந்த பாம்பு தாங்குவதாக கூறப்படுகிறது?

2. மகாதேவனின் (பரமசிவனின்) கழுத்தை சுற்றியுள்ள பாம்பு எது?

3. மஹாபாரதத்தில், பாண்டவர்களுடன் பல தலைமுறைகளுக்கு பகை கொண்ட எந்த வீரியமுள்ள பாம்பு பரீக்ஷித்தைக் கடித்தது?

4. ஹரிவாம்ஸத்தில் உள்ள ஒரு கதையில், கிருஷ்ணரும் ஒரு மிகப்பெரிய பாம்பும் இருப்பது நமக்கு தெரியும். அது எந்த கதை?

கார்க்கோடகன் என்ற தெய்வீக பாம்பின் வம்ஸத்தில் வந்தவர்தான் லலிதாதித்யன். அவர் இந்தியாவின் எந்தப் பகுதியை ஆண்டார்?

6. வங்காளத்தில் மிகவும் பிரபலமான, பாம்புகளில் பெண் தெய்வத்தின் பெயர் என்ன?

7. ராமாயணத்தில் லக்ஷ்மணன் ஆதிசேஷனின் அவதாரம். மகாபாரதத்தில் அது யார்?

8. பரசுராமரால் கடலிலிருந்து உருவாக்கப்பட்டு, அதன் கடற்கரை நாகராஜாவால் (உப்பு) கரிப்பு நீக்கப்பட்ட மாநிலம் எது?

9. தெற்கு ஆலப்புழையில் உள்ள மன்னாரஸ்ஸால நாகராஜா கோயில் மிகவும் பிரபலமானது. அதில் வேறெங்கும் இல்லாத சிறப்பம்சம் எது?

10. “நாக” என்பது நாம் நாட்டின் பல நகரங்களின் பெயர்களில் உள்ளது. இவற்றில் எந்த நகரத்தின் அடையாள சின்னத்தில் பாம்பு உள்ளது?

11. தமிழ்நாட்டில் எந்த நகர பெயரின் பொருள் “பாம்பு கோயில்”?

12. ஹிமாச்சலில் காஜ்ஜியரில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக கருத்தப்படும் பீமனின் மனைவியும் காஜ்ஜி நாக கோயிலில் நாகராஜாவுடன் வணங்கப் படுகிறார். அவர் யார்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In