சமஸ்கிருத வார்த்தையான ‘மத்’ (போதை தரும்) என்பதிலிருந்து உருவான மத்ஸரா, பொறாமை, காழ்ப்புணர்ச்சி மற்றும் சுயநலம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
புராணங்களின்படி, இந்திரனின் கவனக்குறைவினால் மத்ஸராசுரன் என்ற அசுரன் பிறந்தான். சிவனிடமிருந்து பெற்ற சக்திவாய்ந்த வரத்துடன், அந்த அசுரன் மூன்று உலகங்களிலும் பேரழிவை ஏற்படுத்தினான். அவனிடமிருந்து மூவுலகையும் காப்பாற்ற, கணேசர் வளைந்த தும்பிக்கை உடைய “வக்ரதுண்டராக” அவதாரம் எடுத்தார். அவர் மத்ஸராசுரனை வெற்றி பெற்றாலும்கூட, அவனை மன்னித்தருளினார்.
வக்ரதுண்டரின் தும்பிக்கை அறிவு, வலிமை மற்றும் நெகிழ்வுத் தன்மையைக் குறிக்கிறது. அதன் வடிவம், உபநிடதங்கள் உன்னதமான ஆன்மீக ஞானம் என்று விவரிக்கும் ஆதி ஒலியான “ஓம்” என்பதைப் பிரதிபலிக்கிறது.
மேலும், வக்ரதுண்டரின் சிம்ம வாகனம், நமது உள்ளார்ந்த தீய குணங்கள் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. கணேசரின் இந்த கம்பீரமான வடிவம், பெரிதும் விரும்பப்படும் “வக்ரதுண்ட மஹாகாய” என்ற துதியின் மூலம் இன்றும் பரவலாகப் போற்றப்படுகிறது.
சமஸ்கிருத வார்த்தையான ‘மத்’ (போதை தரும்) என்பதிலிருந்து உருவான மத்ஸரா, பொறாமை, காழ்ப்புணர்ச்சி மற்றும் சுயநலம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
புராணங்களின்படி, இந்திரனின் கவனக்குறைவினால் மத்ஸராசுரன் என்ற அசுரன் பிறந்தான். சிவனிடமிருந்து பெற்ற சக்திவாய்ந்த வரத்துடன், அந்த அசுரன் மூன்று உலகங்களிலும் பேரழிவை ஏற்படுத்தினான். அவனிடமிருந்து மூவுலகையும் காப்பாற்ற, கணேசர் வளைந்த தும்பிக்கை உடைய “வக்ரதுண்டராக” அவதாரம் எடுத்தார். அவர் மத்ஸராசுரனை வெற்றி பெற்றாலும்கூட, அவனை மன்னித்தருளினார்.
வக்ரதுண்டரின் தும்பிக்கை அறிவு, வலிமை மற்றும் நெகிழ்வுத் தன்மையைக் குறிக்கிறது. அதன் வடிவம், உபநிடதங்கள் உன்னதமான ஆன்மீக ஞானம் என்று விவரிக்கும் ஆதி ஒலியான “ஓம்” என்பதைப் பிரதிபலிக்கிறது.
மேலும், வக்ரதுண்டரின் சிம்ம வாகனம், நமது உள்ளார்ந்த தீய குணங்கள் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. கணேசரின் இந்த கம்பீரமான வடிவம், பெரிதும் விரும்பப்படும் “வக்ரதுண்ட மஹாகாய” என்ற துதியின் மூலம் இன்றும் பரவலாகப் போற்றப்படுகிறது.