நண்பர்கள் விவேகானந்தரை அமெரிக்காவின் சிகாகோவில் நடக்கும் உலக மதங்களின் பாராளுமன்றதில் பங்கு கொள்ள அறிவுறுத்தினர். ஆனால் அவருக்கு அது நடக்கும் காலம் (தேதி) பற்றியும் தெரியாது; பங்குகொள்ள அதிகாரபூர்வ அழைப்பும் கிடையாது. அதனால் அது நடக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அங்கு சென்று அறிமுகம் இல்லாத நண்பர்கள் உதவியுடன் வாழ்ந்தார். பாஸ்டன் நகரில் ஹார்வேர்டை (Harvard) சேர்ந்த பேராசிரியர் ரைட் (Professor Wright) அவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்துதவினார். சிகாகோவில் ஹேல் (Hale) குடும்பத்தினர் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நண்பராகிவிட்டார்கள்.
வெவ்வேறு மதங்களும் ஒரே கடவுளை அடையவே வழிகாட்டுகின்றன என்று வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் ஒரே கடலில் கலப்பதைப் உதாரணப்படுத்தி 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு, மக்களின் மனதை வென்றது.
“வெவ்வேறு இடங்களில் தோன்றிய பல்வேறு நீரோடைகள் அனைத்தும் கடலில் கலக்கின்றன, அதேபோல், ஓ கடவுளே, வளைந்தோ அல்லது நேராகவோ தோன்றினாலும் வெவ்வேறு போக்குகளின் வழியாகச் செல்லும் மனிதர்களின் வெவ்வேறு பாதைகள் அனைத்தும், உம்மை நோக்கி இட்டுச் செல்கின்றன.”
இதைக் கேட்டபிறகு, அவர் பன்னிரண்டு முறை பேச அழைக்கப்பட்டார். ஒரு குழு (மதம்) சார்பில் அல்லாமல் மொத்த மனித சமுதாயத்திற்காக அவர் பேசுவதாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
1893ல் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்துகொண்ட மக்களை இந்த நிழற்படத்தில் காணலாம்.
நண்பர்கள் விவேகானந்தரை அமெரிக்காவின் சிகாகோவில் நடக்கும் உலக மதங்களின் பாராளுமன்றதில் பங்கு கொள்ள அறிவுறுத்தினர். ஆனால் அவருக்கு அது நடக்கும் காலம் (தேதி) பற்றியும் தெரியாது; பங்குகொள்ள அதிகாரபூர்வ அழைப்பும் கிடையாது. அதனால் அது நடக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அங்கு சென்று அறிமுகம் இல்லாத நண்பர்கள் உதவியுடன் வாழ்ந்தார். பாஸ்டன் நகரில் ஹார்வேர்டை (Harvard) சேர்ந்த பேராசிரியர் ரைட் (Professor Wright) அவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்துதவினார். சிகாகோவில் ஹேல் (Hale) குடும்பத்தினர் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நண்பராகிவிட்டார்கள்.
வெவ்வேறு மதங்களும் ஒரே கடவுளை அடையவே வழிகாட்டுகின்றன என்று வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் ஒரே கடலில் கலப்பதைப் உதாரணப்படுத்தி 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு, மக்களின் மனதை வென்றது.
“வெவ்வேறு இடங்களில் தோன்றிய பல்வேறு நீரோடைகள் அனைத்தும் கடலில் கலக்கின்றன, அதேபோல், ஓ கடவுளே, வளைந்தோ அல்லது நேராகவோ தோன்றினாலும் வெவ்வேறு போக்குகளின் வழியாகச் செல்லும் மனிதர்களின் வெவ்வேறு பாதைகள் அனைத்தும், உம்மை நோக்கி இட்டுச் செல்கின்றன.”
இதைக் கேட்டபிறகு, அவர் பன்னிரண்டு முறை பேச அழைக்கப்பட்டார். ஒரு குழு (மதம்) சார்பில் அல்லாமல் மொத்த மனித சமுதாயத்திற்காக அவர் பேசுவதாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
1893ல் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்துகொண்ட மக்களை இந்த நிழற்படத்தில் காணலாம்.