0

சிவராத்திரி வினாடிவினா

இது இண்டியாத்ராவின் வெற்றிகரமான நூறாவது வினாடிவினா ஆகும்.

சிவனைப்பற்றிய ஆயிரக்கணக்கான கதைகள் பல லட்சம் பக்தர்களால் படிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. இந்த சிவராத்திரி நன்னாளில் சிவனைப்பற்றிய சில மகத்தான கதைகளையும், சிவன் மற்ற தெய்வங்கள், சிவனடியார்கள், சைவநெறியினை ஏற்காதவர்கள் பற்றியும் காண்போமாக.

இந்த பிரபஞ்சத்தை அவர் காக்க, வழிநடத்த, எதிரிகளை அழிக்க கையாண்ட உத்திகளையும், ஒரு மானுடனைப்போல் அன்புக்கும், பக்திக்கும் கட்டுப்பட்டு அவர் எவ்வாறு திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்பதையும் பார்ப்போம்.

இண்டியாத்ரா அடைந்துள்ள நூறாவது வினாடிவினா என்ற மைல்கல்லை கொண்டாடும் வகையில் இந்த வினாடி வினாவில் பங்கு பெறுபவர்களில் 20 அதிர்ஷ்டசாலிகள் திரு.விக்ரம் சம்பத் எழுதிய “Waiting for Siva” என்ற புத்தகம் பரிசாகப் பெறுவர்.

1. லிங்கோத்பவர் நிகழ்வில் அடிமுடி காணப்படமுடியாத தூணின் அடியைக்காண விஷ்ணு ஓர் அவதாரம் எடுத்தார். அது என்ன உருவம்?

2. சிவதாண்டவத்திற்குக் காரணமான சதி தன்னையே தீயிட்டுக் கொண்டமை கங்கல் என்ற இடத்தில் நிகழ்ந்தது. கங்கல் எந்த யாத்திரைத் தலத்திற்கு அருகில் உள்ளது?

3. சிவனால் முதலில் கொல்லபட்டு பின்னர் பார்வதி திருமணத்திற்குப்பின் உயிர்ப்பிக்கப்பட்டது யார்?

4. சிவன் இந்த மாவீரனுடன் ஒற்றைக்கு ஒற்றை போரிட்ட பிறகு மிகவும் விசேஷமான பாசுபத அஸ்த்ரத்தை பரிசாக அளித்தார்?

5. நடனமாடும் சிவனான நடராஜரால் மிதித்துக் கொல்லப்பட்ட அபஸ்மாரா என்ற அசுரனின் உருவம் எதைக் குறிக்கிறது?

6. சிவன் பிரம்மாவை தேரோட்டியாகவும் விஷ்ணுவை அம்பாகவும் பயன்படுத்தி எந்த அசுரனை வதம் செய்தார்?

7. பாணாசுரனைக் காப்பதற்கு சிவன் தனக்கு விருப்பமான கடவுள் ஒருவருடன் போரிட்டார். அவர் எதிர்த்துப் போரிட்ட எதிரி யார்?

8. சிவபெருமான் கூட ஏழரை ஆண்டுகள் அந்த கோளின் பிடியின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது என நம்பப்படுகிறது. அக்காலம் எந்த கோளினால் கட்டுப்படுத்தப்படுகிறது?

9. சிவன் ஆவிமுக்தா என்ற நகரத்தைக் கதிர்தாக்கத்திலிருந்து தனது திரிசூலத்தால் காப்பாற்றினார். அந்த நகரம் எந்தப் புனித நகரமாக அறியப்படுகிறது?

10. சக்தியின்றியும் இவ்வுலகம் இயங்கும் என்ற சிவனின் அறைகூவலை எதிர்த்து பார்வதி ஓர் உருவத்தை எடுத்தார். அது என்ன உருவம்?

11. அந்தகாசுரன் சிவ பார்வதியின் மைந்தராவார். அவரின் வளர்ப்புத் தந்தை வராக அவதாரமாக உருவெடுத்த விஷ்ணுவால் கொல்லப்பட்டவர். அந்த வளர்ப்புத் தந்தை யார்?

12. தனது பக்தனின் ஆயுட்காலம் முடிகிறது என்பதை உணர்ந்த சிவபெருமான் லிங்கத்திலிருந்து கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி தனது பக்தனைக் காத்தார். அவ்வாறு காப்பாற்றப்பட்ட பக்தன் யார்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In