நேரு அவர்கள், அவரது ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலில் இவ்வாறு எழுதினார்.
அஹில்யாபாய் அவரது ஆட்சியின் அனைத்து அம்சங்களிலும் புகழ் பெற்றவர். அவர் மாநில நிதியையும் சொந்த நிதியையும் தனித்தனியாக வைத்திருந்தார். அவர் வரி வசூலிப்பதிலும், கருவூலத்திலிருந்தும் யுத்தத்தில் கிடைத்த பொருளிலிருந்தும் பேஷ்வாவிற்கு சேர வேண்டிய பங்கை செலுத்துவதிலும் திறமைசாலியாகவிருந்தார். அவர் நிர்வகித்த நீதி அமைப்பு சற்றும் பாரபட்சமற்றதாகவும் காலதாமதமின்றி விரைவில் மக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது. மற்றும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டதாகவும் இருந்தது. அந்த நீதி அமைப்பு நடைமுறைப் படுத்தக் கூடியதாகவும் பஞ்சாயத்து போன்ற அமைப்புகள் வழங்கிய நீதியை மதிக்கப்பதாகவும் இருந்தது. அவரது தொண்டு பணிகளும் புகழ் பெற்றவை. பாரதத்திலுள்ள அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களும் அவரது பங்களிப்பை பெற்றிருந்தன.
ஜோனா பெய்லி என்கிற ஸ்காட்லாந்து தேசத்து பெண் கவிதாயினி ஒரு கவிதையாக எழுதினார்:
“அமைதியின் ஆட்சி, அவரது முப்பது வருட காலம், நிலங்களும் பெருகி ஆசிர்வதிக்கப்பட்ட காலம்
வாழ்த்திப் பேசின ஒவ்வொரு நாவும் – கண்டிப்பு மிக்கவராலும் கண்ணியம் மிக்கவராலும் , முதியோராலும் இளையோராலும்.
ஆம்! குழந்தைகள் கூட அவர்களின் தாய்மார்களின் மடியில் இந்த அடுக்குத் தொடர்களை கற்றுக் கொண்டனர்.
கடைசி காலத்தில் பிரம்மாவிடம் இருந்து பெண்ணரசி ஒருத்தி வந்தாள் நம்மை ஆள்வதற்கு கருணையே அவள் இதயம் பிரகாசமே அவள் உருவம் அஹில்யா என்பதே அவளது கௌரவமான பெயர்.”
மராட்டியருடன் போரிட்ட சர் ஜான் மால்கம் என்கிற பாம்பே நகரின் ஆளுனர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதினார் “அஹில்யாபாய் அவர்களின் அசாதாரணமான திறமை அவரது நாட்டு மக்கள் மட்டுமன்றி மராட்டிய கூட்டமைப்பின் நன்மதிப்பை பெற்றிருந்தது – நானா ஃபட்னவிஷிடமிருந்தும் கூட. மால்வா பிரதேசத்து மக்களிடையில் அவரது பெயர் புனிதமாக கருதப்பட்டது. அவரை ஒரு தெய்வத்தின் அவதாரமாகவே பார்த்தனர். அவருடைய குணாதிசயங்களை, மிக நிதானமாக பார்க்கும் பொழுது, அவரது எல்லைக்குட்பட்ட வரையில் அவர் மிகப் புனிதமான மற்றும் முன்மாதிரியான ஆட்சியாளர்களில் ஒருவராக உள்ளார்”
நேரு அவர்கள், அவரது ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலில் இவ்வாறு எழுதினார்.
அஹில்யாபாய் அவரது ஆட்சியின் அனைத்து அம்சங்களிலும் புகழ் பெற்றவர். அவர் மாநில நிதியையும் சொந்த நிதியையும் தனித்தனியாக வைத்திருந்தார். அவர் வரி வசூலிப்பதிலும், கருவூலத்திலிருந்தும் யுத்தத்தில் கிடைத்த பொருளிலிருந்தும் பேஷ்வாவிற்கு சேர வேண்டிய பங்கை செலுத்துவதிலும் திறமைசாலியாகவிருந்தார். அவர் நிர்வகித்த நீதி அமைப்பு சற்றும் பாரபட்சமற்றதாகவும் காலதாமதமின்றி விரைவில் மக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது. மற்றும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டதாகவும் இருந்தது. அந்த நீதி அமைப்பு நடைமுறைப் படுத்தக் கூடியதாகவும் பஞ்சாயத்து போன்ற அமைப்புகள் வழங்கிய நீதியை மதிக்கப்பதாகவும் இருந்தது. அவரது தொண்டு பணிகளும் புகழ் பெற்றவை. பாரதத்திலுள்ள அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களும் அவரது பங்களிப்பை பெற்றிருந்தன.
ஜோனா பெய்லி என்கிற ஸ்காட்லாந்து தேசத்து பெண் கவிதாயினி ஒரு கவிதையாக எழுதினார்:
“அமைதியின் ஆட்சி, அவரது முப்பது வருட காலம், நிலங்களும் பெருகி ஆசிர்வதிக்கப்பட்ட காலம்
வாழ்த்திப் பேசின ஒவ்வொரு நாவும் – கண்டிப்பு மிக்கவராலும் கண்ணியம் மிக்கவராலும் , முதியோராலும் இளையோராலும்.
ஆம்! குழந்தைகள் கூட அவர்களின் தாய்மார்களின் மடியில் இந்த அடுக்குத் தொடர்களை கற்றுக் கொண்டனர்.
கடைசி காலத்தில் பிரம்மாவிடம் இருந்து பெண்ணரசி ஒருத்தி வந்தாள் நம்மை ஆள்வதற்கு கருணையே அவள் இதயம் பிரகாசமே அவள் உருவம் அஹில்யா என்பதே அவளது கௌரவமான பெயர்.”
மராட்டியருடன் போரிட்ட சர் ஜான் மால்கம் என்கிற பாம்பே நகரின் ஆளுனர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதினார் “அஹில்யாபாய் அவர்களின் அசாதாரணமான திறமை அவரது நாட்டு மக்கள் மட்டுமன்றி மராட்டிய கூட்டமைப்பின் நன்மதிப்பை பெற்றிருந்தது – நானா ஃபட்னவிஷிடமிருந்தும் கூட. மால்வா பிரதேசத்து மக்களிடையில் அவரது பெயர் புனிதமாக கருதப்பட்டது. அவரை ஒரு தெய்வத்தின் அவதாரமாகவே பார்த்தனர். அவருடைய குணாதிசயங்களை, மிக நிதானமாக பார்க்கும் பொழுது, அவரது எல்லைக்குட்பட்ட வரையில் அவர் மிகப் புனிதமான மற்றும் முன்மாதிரியான ஆட்சியாளர்களில் ஒருவராக உள்ளார்”