பாண்டவர்கள் வனவாசம் செல்லும்போது, பல பிராமணர்கள் தங்கள் உறவினர்களுடன் பாண்டவர்களைப் பின்பற்ற முடிவு செய்கிறார்கள். பாண்டவர்களே வனவாசத்தில் இருக்கும்போது அவர்கள் அனைவருக்கும் எப்படி உணவளிப்பது என்று யுதிஷ்டிரர் கவலைப்படுகிறார். அப்போது, பாண்டவர்களின் புரோகிதர், தௌம்யர், சூரியன் அனைவருக்கும் உணவளிக்கிறார் என்றும், அவரை அணுகும்படியும் யுதிஷ்டிரரிடம் கூறுகிறார். யுதிஷ்டிரர் திவாகர பூஜை செய்கிறார். மகிழ்ச்சியடைந்த சூரியன் யுதிஷ்டிரர் முன் தோன்றி, பாண்டவர்களின் சமையலறையில் பழங்கள், கிழங்குகள், இறைச்சி மற்றும் காய்கறிகள் என நான்கு வகையான உணவுகளுக்கு என்றும் குறைவிருக்காது என்று உறுதியளிக்கிறார்.
மகாபாரதத்தின் அதிகார பூர்வமான பதிப்பில், அக்ஷய பாத்திரம் இடம்பெறவில்லை. சூரிய பகவான் கொடுத்த இந்த வரம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற பதிப்புகளிலும் பிரபலமான கதைகளிலும், சூரியன் யுதிஷ்டிரருக்கு அக்ஷய பாத்திரத்தை பரிசாக அளிப்பதாக சொல்லப்படுகிறது, ஒரு துளி உணவு இந்த பாத்திரத்தில் இருந்தாலும் போதும், எடுக்க எடுக்க உணவு குறையாது. ஆனால், இந்த பாத்திரம் காலியாக இருந்தால் உணவு வராது. ஒரு நாள், துர்வாச முனிவர் தனது பரிவாரங்களுடன் பாண்டவர்களைச் சந்திக்க வந்தார். அதற்கு சற்று முன்பே திரௌபதி அனைவருக்கும் உணவு அளித்துவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு, அக்ஷய பாத்திரத்தை காலி செய்திருந்தாள். பாத்திரம் காலியாகிவிட்டதால் மறுநாள்வரை அதிலிருந்து உணவு வராது. துர்வாச முனிவருக்கு எப்படி உணவு இடுவது என்று புரியாமல் பயந்து போகிறாள். கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கிறாள், அவர் அக்ஷய பாத்திரத்தில் ஒரு துண்டு உணவு மிச்சம் இருப்பதை காண்கிறார். அவர் அந்தத் துண்டைச் சாப்பிடுகிறார். அதிசயமாக துர்வாசரும் அவரது சீடர்களும் அதே நேரத்தில் பசி தீர்ந்து திருப்தி அடைந்ததாக உணர்கிறார்கள். ஆதாரம்: அர்ஜுன் பரத்வாஜ் மற்றும் ஹரி ரவிக்குமார். Essential Mahabharata
Picture – Rock art believed to be Pandavas and Draupadi with Akshaya Patra at Amba Teerth, Karnataka
பாண்டவர்கள் வனவாசம் செல்லும்போது, பல பிராமணர்கள் தங்கள் உறவினர்களுடன் பாண்டவர்களைப் பின்பற்ற முடிவு செய்கிறார்கள். பாண்டவர்களே வனவாசத்தில் இருக்கும்போது அவர்கள் அனைவருக்கும் எப்படி உணவளிப்பது என்று யுதிஷ்டிரர் கவலைப்படுகிறார். அப்போது, பாண்டவர்களின் புரோகிதர், தௌம்யர், சூரியன் அனைவருக்கும் உணவளிக்கிறார் என்றும், அவரை அணுகும்படியும் யுதிஷ்டிரரிடம் கூறுகிறார். யுதிஷ்டிரர் திவாகர பூஜை செய்கிறார். மகிழ்ச்சியடைந்த சூரியன் யுதிஷ்டிரர் முன் தோன்றி, பாண்டவர்களின் சமையலறையில் பழங்கள், கிழங்குகள், இறைச்சி மற்றும் காய்கறிகள் என நான்கு வகையான உணவுகளுக்கு என்றும் குறைவிருக்காது என்று உறுதியளிக்கிறார்.
மகாபாரதத்தின் அதிகார பூர்வமான பதிப்பில், அக்ஷய பாத்திரம் இடம்பெறவில்லை. சூரிய பகவான் கொடுத்த இந்த வரம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற பதிப்புகளிலும் பிரபலமான கதைகளிலும், சூரியன் யுதிஷ்டிரருக்கு அக்ஷய பாத்திரத்தை பரிசாக அளிப்பதாக சொல்லப்படுகிறது, ஒரு துளி உணவு இந்த பாத்திரத்தில் இருந்தாலும் போதும், எடுக்க எடுக்க உணவு குறையாது. ஆனால், இந்த பாத்திரம் காலியாக இருந்தால் உணவு வராது. ஒரு நாள், துர்வாச முனிவர் தனது பரிவாரங்களுடன் பாண்டவர்களைச் சந்திக்க வந்தார். அதற்கு சற்று முன்பே திரௌபதி அனைவருக்கும் உணவு அளித்துவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு, அக்ஷய பாத்திரத்தை காலி செய்திருந்தாள். பாத்திரம் காலியாகிவிட்டதால் மறுநாள்வரை அதிலிருந்து உணவு வராது. துர்வாச முனிவருக்கு எப்படி உணவு இடுவது என்று புரியாமல் பயந்து போகிறாள். கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கிறாள், அவர் அக்ஷய பாத்திரத்தில் ஒரு துண்டு உணவு மிச்சம் இருப்பதை காண்கிறார். அவர் அந்தத் துண்டைச் சாப்பிடுகிறார். அதிசயமாக துர்வாசரும் அவரது சீடர்களும் அதே நேரத்தில் பசி தீர்ந்து திருப்தி அடைந்ததாக உணர்கிறார்கள். ஆதாரம்: அர்ஜுன் பரத்வாஜ் மற்றும் ஹரி ரவிக்குமார். Essential Mahabharata
Picture – Rock art believed to be Pandavas and Draupadi with Akshaya Patra at Amba Teerth, Karnataka