77

பாரதத்தின் பக்தித் துறவிகள் வினாடி வினா

மிகவும் போற்றப்படும் பக்திக் கவிஞர் கபீர் தாஸரின் அவதார திருநாள் இன்று. கடவுளின் மீது நாம் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையே பக்தி என்பது மிகப் பழமையான கருத்தாகும். ஈஷோபனிஷத், கீதை ஆகியவை பக்தியை போற்றுகின்றன. பக்தி கவிதை இலக்கியம் தமிழ் கூறும் நல்லுலகில் ஆறாம் நூற்றாண்டில் உருவாகி இந்தியா முழுவதும் பரவியது. மேலும் ஒரு சமஸ்கிருத வசனம் “பக்தி திராவிடத்தில் பிறந்து, கர்நாடகத்தில் பருவமடைந்து, மகாராஷ்டிரத்தில் அலைந்து திரிந்து, குஜராத்தில் முதுமையுற்று, ப்ருந்தாவனத்தில் இளங்கன்னியாக மீண்டும் உருவெடுத்தது” எனக் கூறுகிறது. இந்த பன்னிரண்டு கேள்வி புதிர்த்தொகுப்பில் நாம் நமது நாட்டின் பக்தித் துறவிகளைப்பற்றி அறிந்து கொள்வோம். ஆண்ட்ரூ ஷெல்லிங்கின் பக்தி இலக்கியத்தைப் பற்றிய ஆய்வே இக்கேள்விகளின் ஆதாரம்.
ஐந்து அதிர்ஷ்டசாலிகள் பிபேக் ஓபராயின் ‘பகவத் கீதா ஃபார் மில்லேனியல்ஸ்’ என்ற நூலைப் பரிசாக பெறுவார்கள்

தமிழகத்தில் தங்களது தீவிர பக்திப் பாடல்கள் மூலம் வாழ்வின் பாதையை சுடர்விடச் செய்த வைணவப் பெரியோர்கள் யாவர்?

அக்கா மஹாதேவி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பெண் துறவி. அவரது வெளிப்படையான, பழமைக்கு எதிரான வசனங்கள் எதிர்ப்புக் கவிதைகளாகப் புகழ் பெற்றன. அவர் எந்த மொழியில் கவிதைகளை எழுதினார்?

லால் டெட் என்ற லல்லா பதிநான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஹிந்து மற்றும் முஸ்லீம்களாலும் போற்றப்பட்ட பக்தித் துறவிகளில் முதன்மையானவர். அவர் எங்கு வாழ்ந்தார்?

துர்ஜதி என்ற பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி திருப்பதிக்கு அருகிலுள்ள காலஹஸ்தி கோவிலின் மேல் அவர் கொண்ட பக்தியால் பிரபலமானார். இந்த கோவிலின் முக்கிய தெய்வம் எது?

கீழ்க்கண்ட துறவிகளில் எந்த துறவி மஹாராஷ்டிரா வர்காரி வழிமுறையைச் சார்ந்தவரில்லை?

அகா பகத் அல்லது அகோ என்றழைக்கப்பட்ட குஜராத்தி கவிஞர் சமூகக்கேடுகளையும் அவலங்களையும் கடுமையாகக் கண்டித்து கவிதைகள் புனைந்தார். அவரது ஆறு வரிக் கவிதைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

அந்தகக் கவி சூர்தாஸ் கிருஷ்ணனின் மீது பல இனிய பாடல்களைப் பாடி பெரும்புகழ் பெற்றவராவார். அவர் எந்த வட இந்திய வட்டார வழக்கு மொழியில் பாடல்களை புனைந்தார்?

பிரதமர் மோடி ஒரு தோல் பதனிடும் தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்த கவிஞரை குறிப்பிட்டு, தலைவர்களின் முக்கிய பணி மக்களுக்கு உணவும் சமத்துவமும் பெற்றுத் தருவதே ஆகும் என்றுரைத்தார். அந்தக் கவிஞர் யார்?

அக்பரின் அரண்மனையில் நவரத்தினங்களாய் ஜொலித்த புலவர்களில் யாருடைய பக்திக் கவிதைகள் இன்றும் இந்தி பேசுபவர்களிடம் புகழ் பெற்று விளங்குகின்றன?

அவர்கள் கடவுளின் நாடோடிப் பாடகர்கள். வங்காளத்தில் கிராமம் கிராமமாக பயணித்து கடவுள் புகழ் பாடி, ஜாதி மத வேறுபாடுகளைத் தகர்ப்பவர்கள். யார் அவர்கள்?

கபீர் காலமானபோது ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் இறுதி சடங்கு நடத்தும் முறை பற்றி சண்டையிட்டுக்கொண்டனர். உடலின் மீதிருந்த சவச்சீலையை நீக்கிபார்த்தபோது உடல் என்னவாக மாறியிருந்தது?

எந்த வங்காள சீர்திருத்தவாதியான நவீன எழுத்தாளர் பானுசிம்ஹா என்ற புனைபெயரில் பக்தி கவிதைகள் எழுதினார்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In