ஸ்ரீ.விஸ்வேஸ்வரய்யா பெங்களூர் அருகிலுள்ளமுத்தெனஹள்ளி எனும் சிறு கிராமத்தில் பிறந்தார். புனேவில் பொறியாளர் பட்டப்படிப்பு முடித்தார்.
இவர் சூரத்,பம்பாய், ஹைதராபாத் போன்ற இடங்கள் மட்டுமல்லாது தான்சானியா ஏடன், ஸ்ரீலங்காவிலும் அரிய பணிகள் ஆற்றி உள்ளார்.1909 இல் மைசூர் பிரதேச தலைமை பொறியாளராக இவர் நியமிக்கப்பட்ட சமயம் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டும் பணி பற்றி முன் முழிந்தார் ..
மிகவும் செலவு அதிகமாக இருந்தும் மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் முழு ஆதரவு தந்து ,20 வருடங்கள் பணி செய்து 1931 இல் முடிக்கப்பட்டது இந்த அணை..
விஸ்வேஸ்வரைய்யாவின் தொழில் நுட்பக்கண்டு பிடிப்பான தானியங்கி மதகுக்கதவுகள் கொண்ட இந்த அணை ,,நீர்பாசனம் மற்றும் இரு மாகாணங்களின் நீர் வழங்கலுக்கு ஆதாரமாக விளங்கியது.
மைசூர் மஹாராஜாவிற்கு திவானாக பணிபுரிந்த இவர் மைசூரை மிகவும் நவீன நகரமாக மாற்றினார். தொழிற்சாலைகள்,பல்கலைக்கழகங்கள் வங்கிகள்( banks) மின்வாரியம் என அருமையான வசதிகளை நிறுவினார்..இவர் பணிகளை மெச்சி ஆங்கிலேயர் “ஸர்” எனும் உயர்ந்த பட்டத்தையும், நம் இந்தியா மிக உயரிய பாரத்ரத்னா பட்டத்தையும் வழங்கின.
இவரை நவீன விஸ்வகர்மா என அழைப்பதில் ஏதும் மிகைப்படுத்தல் இல்லைதானே….
இவ்வளவு பிரசித்தமும் புகழும் பெற்றும்,ராஜாவால் திவானாக நியமிக்கப்பட்ட வுடன் இவர் தன் உறவுகள் அனைவரையும் அழைத்து யாரும் தன்னிடம் அரசு சேவகர் என்ற முறையில் எந்த உதவியும் எதிர்பார்க்க
கூடாது என ஒப்பந்தம் வாங்கிக்கொண்டார் தன்னலமற்ற தன்மை பெற்ற இவர்..
வருஷம் தோறும் செப்டம்பர்.15 அன்று , விஸ்வேஸ்வரைய்யாவை கௌரவிக்கும் முறையில் இவர் பிறந்த நாளை நாம் மட்டுமல்லாது ஸ்ரீலங்கா, தன்ஸானிய அரசும் பொறியாளர் தினமாகக் கொண்டாடுகின்றன.
இந்தப்படம் விக்,கிபீடியாவில் அஸ்வின் குமாரின் கிருஷ்ணராஜசாகர் அணை.
ஸ்ரீ.விஸ்வேஸ்வரய்யா பெங்களூர் அருகிலுள்ளமுத்தெனஹள்ளி எனும் சிறு கிராமத்தில் பிறந்தார். புனேவில் பொறியாளர் பட்டப்படிப்பு முடித்தார்.
இவர் சூரத்,பம்பாய், ஹைதராபாத் போன்ற இடங்கள் மட்டுமல்லாது தான்சானியா ஏடன், ஸ்ரீலங்காவிலும் அரிய பணிகள் ஆற்றி உள்ளார்.1909 இல் மைசூர் பிரதேச தலைமை பொறியாளராக இவர் நியமிக்கப்பட்ட சமயம் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டும் பணி பற்றி முன் முழிந்தார் ..
மிகவும் செலவு அதிகமாக இருந்தும் மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் முழு ஆதரவு தந்து ,20 வருடங்கள் பணி செய்து 1931 இல் முடிக்கப்பட்டது இந்த அணை..
விஸ்வேஸ்வரைய்யாவின் தொழில் நுட்பக்கண்டு பிடிப்பான தானியங்கி மதகுக்கதவுகள் கொண்ட இந்த அணை ,,நீர்பாசனம் மற்றும் இரு மாகாணங்களின் நீர் வழங்கலுக்கு ஆதாரமாக விளங்கியது.
மைசூர் மஹாராஜாவிற்கு திவானாக பணிபுரிந்த இவர் மைசூரை மிகவும் நவீன நகரமாக மாற்றினார். தொழிற்சாலைகள்,பல்கலைக்கழகங்கள் வங்கிகள்( banks) மின்வாரியம் என அருமையான வசதிகளை நிறுவினார்..இவர் பணிகளை மெச்சி ஆங்கிலேயர் “ஸர்” எனும் உயர்ந்த பட்டத்தையும், நம் இந்தியா மிக உயரிய பாரத்ரத்னா பட்டத்தையும் வழங்கின.
இவரை நவீன விஸ்வகர்மா என அழைப்பதில் ஏதும் மிகைப்படுத்தல் இல்லைதானே….
இவ்வளவு பிரசித்தமும் புகழும் பெற்றும்,ராஜாவால் திவானாக நியமிக்கப்பட்ட வுடன் இவர் தன் உறவுகள் அனைவரையும் அழைத்து யாரும் தன்னிடம் அரசு சேவகர் என்ற முறையில் எந்த உதவியும் எதிர்பார்க்க
கூடாது என ஒப்பந்தம் வாங்கிக்கொண்டார் தன்னலமற்ற தன்மை பெற்ற இவர்..
வருஷம் தோறும் செப்டம்பர்.15 அன்று , விஸ்வேஸ்வரைய்யாவை கௌரவிக்கும் முறையில் இவர் பிறந்த நாளை நாம் மட்டுமல்லாது ஸ்ரீலங்கா, தன்ஸானிய அரசும் பொறியாளர் தினமாகக் கொண்டாடுகின்றன.
இந்தப்படம் விக்,கிபீடியாவில் அஸ்வின் குமாரின் கிருஷ்ணராஜசாகர் அணை.