89

சங்கர ஜெயந்தி — வினாடி வினா

இன்று, நம் வேதங்களுக்கு உரைகளையும், மூலதத்துவங்களையும், எண்ணற்ற ஸ்தோத்திரங்களையும் வழங்கியுள்ள தத்துவஞானி ஆதிசங்கரரது ஜெயந்தி. அவரது படைப்புகளை, நம் நாட்டின் பண்டைய பிரம்மாண்டமான நூலகத்திற்குள்ளேயே அமைந்துள்ள மற்றொரு நூலகமாகவே கருதலாம். சுவாமி சின்மயானந்தர் “ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு புனித நூல் உண்டு — இந்து மதத்தைப் பொறுத்தவரை அதுவே ஓரு நூலகம்; உங்களுக்கு நல்வரவு” என்று கூறினார்.
இந்த வினாடி வினாவில், கடலில் ஒரு துளி போன்ற, இந்து மதத்தின் இன்றியமையாத 12 அடிப்படை நூல்களைப் பற்றி பார்ப்போம்.
இந்த வினாவிடை, ஹரி ரவிகுமார் மொழிபெயர்த்த, சதாவதானி ஆர். கணேஷ் எழுதிய ‘தி எசென்ஷியல் சனாதன தர்மா’ (The Essential Sanatana Dharma) மற்றும் அமி கணத்ரா (Ami Ganatra) எழுதிய ‘ஒய் ஆர் வி லைக் திஸ் ஒன்லி — ஹிந்து சாஸ்திரங்களுக்கு ஒரு கையேடு” (Why Are We Like This Only — A Guide to Hindu Shastras) ஆகிய இரண்டு அருமையான புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.

1. வேதங்களே இவ்வுலகின் மிகப்பழைய சமய நூல்கள். இவற்றை தொகுத்தவர் யார்?

2. சமஸ்கிருத இலக்கணம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாணினியால் தொகுக்கப்பட்டது. இந்த இலக்கணஉரை என்னவென்று அழைக்கப் படுகிறது?

3. காயத்ரி என்பது சூரியனை வழிபடும் ஒரு மந்திரம். காயத்ரி மந்திரத்தில் உள்ள காயத்ரி என்ற பெயர் எதைக் குறிக்கிறது?

4. ஜோதிஷம் என்பது ஜோதிடம் மட்டுமே எனப் பரவலாகக் கருதப் படுகிறது. அதன் சரியான பொருள் என்ன?

5. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இந்திய தத்துவ அமைப்பின் எந்த அம்சத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது?

6. சரக சம்ஹிதை என்பது இன்று உலகளவில் பிரபலமான ஒரு பண்டைய இந்திய நூலாகும். அது என்ன?

7. நாட்டிய சாஸ்திரம் என்பது நாட்டிய வேதத்திலிருந்து பெறப்பட்ட, நிகழ்ச்சி கலைகள் (மற்றும் பல) சார்ந்த ஒரு கையேடு ஆகும். நாட்டிய வேதம் எந்தத் தெய்வத்துடன் தொடர்புடையது?

8. இராமாயணமும் மகாபாரதமும் இதிஹாசங்கள். இதிஹாசா என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

9. வேத வியாசர், தேவர்கள், அரசர்கள், வம்சங்கள் மற்றும் இடங்களின் கதைகளைக் கூறும் மற்றொரு படைப்புத் தொகுப்பைத் தொகுத்தார். அது எது?

10. கோயில் கட்டுமானம் மற்றும் வழிபாடு பற்றி ஆய்வு செய்யும் துறை எது?

11. தத்துவம் என்பதற்கான சமஸ்கிருதச் சொல் தர்ஷனா. அதன் பொருள் என்ன?

12. உபநிடதங்கள் வேதாந்தத்தின் அடித்தளம். வேதாந்தம் என்றால் என்ன?

முடிவுரை:
நாம் வேதங்கள், மூன்று உபவேதங்கள், மூன்று வேதாங்கங்கள், இதிகாசங்கள் பற்றிய கருத்து, புராணங்கள், ஆகமங்கள், தர்சனங்கள் மற்றும் வேதாந்தம் ஆகிய ஒரு சில படைப்புகளை மேலோட்டமாகப் பார்த்தோம்.
இந்து தத்துவ நூலகம் மிகமிகப் பெரியது. ஆதி சங்கரர் (சங்கராச்சாரியார்) மட்டுமே குறைந்தது 18 உரைநூல்களையும், 23 மூலத் தத்துவ நூல்களையும், 73 ஸ்தோத்திரங்களையும் எழுதியுள்ளார். மகாபுராணங்களில் மட்டுமே 4,00,000 சுலோகங்களும், மகாபாரதத்தில் 89,000 சுலோகங்களும் உள்ளன.
பி.வி. கனேயின் (P.V. Kane) “தர்மசாஸ்திரங்களின் வரலாறு” என்ற நூல் மட்டுமே 6500 பக்கங்கள் கொண்டது, அதை நாம் இந்த வினாடி வினாவில் உள்ளடக்கவே இல்லை. வேதங்கள் மீதான இரண்டாம் நிலை ஆய்வுகளின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காது. 1930-ம் ஆண்டளவில் உலகம் முழுவதும் குறைந்தது 6500 அத்தகைய நூல்கள் இருந்தன (லூயி ரெனோ – Louis Renou); மேலும் 1930-க்கும் 1945-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் கூடுதலாக 3500 நூல்கள் சேர்க்கப்பட்டன (ஆர்.என். தண்டேகர் – R.N Dandekar). உதாரணமாக எடுத்துக்கொண்டால் மகத்தான பிராந்திய படைப்புகளான நாராயணீயம் மற்றும் கம்பராமாயணம் போன்ற நூல்கள் மட்டுமே ஏராளம்.
இந்து தத்துவ நூலகத்தின் பரப்பையும் ஆழத்தையும் உங்களுக்கு அறிமுகப் படுத்தக் கூடிய இரண்டு அழகான நூல்கள் உள்ளன: சதாவதானி திரு. ஆர். கணேஷ் எழுதிய ‘The Essential Sanatana Dharma (திரு. ஹரி ரவிகுமார் மொழிபெயர்த்த “அத்தியாவசிய சனாதன தர்மம்”) மற்றும் திரு. அமி கனத்ரா (Sri Ami Ganatra) எழுதிய ‘Why are we Like this Only. A Guide to Hindu Shastras’ (நாம் ஏன் இப்படி மட்டுமே இருக்கிறோம்? இந்து சாஸ்திரங்களுக்கான ஒரு வழிகாட்டி). முதல் நூலில், இந்து மதத்தின் அடிப்படை நூல்கள் குறித்த 29 பக்கங்கள் கொண்ட ஒரு சுருக்கமான அத்தியாயம் உள்ளது. இரண்டாவது நூல், இந்தத் தலைப்பிற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும்.

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In