ருக்மாபாய் ராவத், இந்தியாவின் ஆரம்ப கால பெண் மருத்துவர்களில் ஒருவராவார். அதே நேரத்தில், அவர் துணிச்சலான சட்டப் போராட்டத்திற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.
சிறு வயதிலேயே அவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால், அவர் வயது வந்த பிறகு, தனது கணவருடன் சேர்ந்து வாழ மறுத்தார். அவர் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது கணவர் அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தார். 1880-களில் நடந்த இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈற்றது. இந்த வழக்கு, குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கான சீர்திருத்த இயக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் விளைவாக 1891-ஆம் ஆண்டு திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது தொடர்பான சட்டம் (Age of Consent Act of 1891) கொண்டுவரப்பட்டது. கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்காமல், சிறை செல்லும் ஆபத்தையும் எதிர்கொள்ள அவர் தயாராக இருந்தார். இறுதியில், அவர் வழக்கில் வெற்றியும் திருமண பந்தத்திலிருந்து விடுதலையும் பெற்றார்.
பின்னர் அவர் பிரிட்டனுக்குச் சென்று, லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஃபார் விமென் (London School of Medicine for Women) நிறுவனத்தில் படிப்பை முடித்து மருத்துவரானார். அதன் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி, பல ஆண்டுகள் மருத்துவ சேவை செய்தார்.
படத்தில் இருப்பது மும்பையில், ருக்மாபாய் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் கட்டப்பட்ட ஷாரதா மந்திர் பள்ளி.
ருக்மாபாய் ராவத், இந்தியாவின் ஆரம்ப கால பெண் மருத்துவர்களில் ஒருவராவார். அதே நேரத்தில், அவர் துணிச்சலான சட்டப் போராட்டத்திற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.
சிறு வயதிலேயே அவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால், அவர் வயது வந்த பிறகு, தனது கணவருடன் சேர்ந்து வாழ மறுத்தார். அவர் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது கணவர் அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தார். 1880-களில் நடந்த இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈற்றது. இந்த வழக்கு, குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கான சீர்திருத்த இயக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் விளைவாக 1891-ஆம் ஆண்டு திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது தொடர்பான சட்டம் (Age of Consent Act of 1891) கொண்டுவரப்பட்டது. கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்காமல், சிறை செல்லும் ஆபத்தையும் எதிர்கொள்ள அவர் தயாராக இருந்தார். இறுதியில், அவர் வழக்கில் வெற்றியும் திருமண பந்தத்திலிருந்து விடுதலையும் பெற்றார்.
பின்னர் அவர் பிரிட்டனுக்குச் சென்று, லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஃபார் விமென் (London School of Medicine for Women) நிறுவனத்தில் படிப்பை முடித்து மருத்துவரானார். அதன் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி, பல ஆண்டுகள் மருத்துவ சேவை செய்தார்.
படத்தில் இருப்பது மும்பையில், ருக்மாபாய் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் கட்டப்பட்ட ஷாரதா மந்திர் பள்ளி.