116

ஸ்ரீ ராமநவமி – வினாடி வினா

உலகிலேயே முதலில் எழுதப்பட்ட ராமர் கதை வால்மீகியின் ஆதிகாவியம் (ராமாயணம்) தான். நாட்டியம், நாடகம், மற்றும் அதிலுள்ள படிப்பினை, இவற்றுக்காக எல்லோராலும் விரும்பப்பட்டு, ராமாயணம் பல முறைகள் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்திலும், பிராகிருதத்திலும் எழுதப்பட்ட ராமாயண இதிகாசங்களை ராமர் அவதரித்த ராமநவமியான இன்று நாம் பார்ப்பது மிகவும் பொருத்தமானதே. அவற்றிலிருந்து, இரு அறிஞர்களான டாக்டர் வி. ராகவன் மற்றும் டாக்டர் காமில் புல்க்கே (Camille Bulcke) ஆகியவர்களின் படைப்புகளை ஆதாரமாகக் கொண்டு ராமர் கதையை இங்கே ஆராய்வோம்.

The pictures in this quiz are from Janakpur Nepal – Temples and Mithila style wall art.

“ராமோபாக்கியானம்” எனும் வால்மீகி ராமாயணம், முதல் முதலாக எதில் திரும்பவும் சொல்லப் பட்டிருக்கிறது?

காளிதாசரின் கூற்றுப்படி வால்மீகி காவியத்தில், எந்த ரசனை (உணர்வு) மேலோங்கி இருக்கிறது?

காளிதாசருக்கு முன்பே ஒரு சிறந்த கதாசிரியர் ராமர் கதையை நாடக வடிவில் எழுதியிருந்தார். அவ்ர் யார்?

மிகப் பழமையான ராமர் கதையை கி.பி. 5-ம் நூற்றாண்டில் தக்காண அரசர் பிரவரசேனன் (Deccan king Pravarsena), சமஸ்கிருதம் அல்லாத எந்த ஒரு பிராகிருத மொழியில் எழுதினார்?

குமாரதாசர் (கி.பி. 500-ம் ஆண்டு) சீதை கடத்தப்பட்டத்தைக் குறிக்கும் “ஜானகிஹரண” எனும் நூலை சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார். நூலின் இந்த தலைப்பு, குமாரதாசரின் பிறப்பிடத்தைக் குறிக்கிறது. அது எந்த இடம்?

ராமர் கதையான “சாஸ்திர காவியத்தில்” எந்த கோட்பாடுபற்றி விளக்கப் பட்டுள்ளது?

அபிநந்தரின் ராமசரிதத்தில் (கி.பி. 900) லக்ஷ்மணனின் அன்னையான சுமித்திரை அரசி, பாலர்கள் (Pala’s) ஆண்ட பகுதியிலிருந்து வந்ததாக எழுதியிருந்தார். அது எந்தப் பகுதி?

கி.பி. 11-ம் நூற்றாண்டில் மால்வாவை ஆண்ட ஒரு பிரபல அறிஞர் ராமாயண சம்புவை (Ramayana Champu) இயற்றினார். அவர் யார்?

அபிநவகுப்தரின் சீடர் க்ஷேமேந்திரர் 11-ம் நூற்றாண்டில் ராமர் கதையை நான்கு முறை மறுபதிப்பித்தார். அவர் இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?

பவபூதி “உத்தர ராமசரித்ரா”விலும், சோமதேவர், அவரது “கதாசரிதசாகரா” விலும் ராமரின் கதையை வேறுவிதமாக முடித்திருந்தார்கள். அவை யாவை?

அத்யாத்ம இராமாயணம், கி.பி. 13 முதல் 15-ம் நூற்றாண்டு வரை மிகவும் பிரபலமாக, வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய படிப்பினையாகத் திகழ்ந்தது. அதில் ராமபக்தி எந்த உயர்த்த தத்துவத்துடன் இணக்கமாக ஒத்திருந்தது?

15-ம் நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலத்தில் வந்த “அற்புத ராமாயணம்” மற்றும் “ஆனந்த ராமாயணம்” ஆகியவை கிருஷ்ணர் வாழ்வின் எந்த அம்சத்தை உள்ளடக்கியிருந்தன?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In