நரசிங் மேத்தா (15 ம் நூற்றாண்டு) குஜராத்தி மொழியின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். நரசிங் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சௌராஷ்டிராவில் உள்ள ஜுனாகத் நகரில் கழித்தார். அவர் கிருஷ்ணரின் தீவிர பக்தராக இருந்தார். இவரது பிரபலமான பாடல்களில் பெரும்பாலானவை, குஜராத்தில் உள்ள விரஜ் பகுதியில் வாழ்ந்த கிருஷ்ணரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை.
அவரது படைப்பான “வைஷ்ணவஜன தோ தேனே ரே கஹியே” (வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்) என்பது மகாத்மா காந்தியின் விருப்பமான பக்திப் பாடலாகும். இந்த பாடல் சமய பற்றுள்ள ஒருவரை, கருணை மற்றும் தார்மீக நேர்மையின் அடிப்படையில் வரையறுக்கிறது. மகாத்மா, இதனை வேதங்களுக்கு இணையாக கருதினார்.
நரசிங் மேத்தா குஜராத்தில் மிகவும் மதிக்கப்படும் கவிஞராக திகழ்கிறார். அவர் அப்பகுதியின் மிக முக்கியமான துறவி-கவிஞராகவும், குஜராத்தி மொழியின் முதல் ஆதிகவியாகவும் போற்றப்படுகிறார். குஜராத்தி கவிதைக்கான ஒரு மதிப்புமிக்க விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது; ஏரிகளுக்கும் மற்றும் சாலைகளுக்கும் கூட அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது; மேலும் குஜராத்தின் முக்கிய நகரங்களில் பக்திப் பாடல்களைப் பாடும் கோலத்தில் அவரது சிலைகள் காணப்படுகின்றன. இந்தப் படம், நரசிங் மேத்தாவின் படைப்புகளைக் கொண்ட 17 -ம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதி ஆகும்.
ஆதாரம் மற்றும் பட உதவி: குஜராத்தின் நரசிங் மேத்தா, எடுத்தவர் நீலிமா சுக்லா – பட்
நரசிங் மேத்தா (15 ம் நூற்றாண்டு) குஜராத்தி மொழியின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். நரசிங் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சௌராஷ்டிராவில் உள்ள ஜுனாகத் நகரில் கழித்தார். அவர் கிருஷ்ணரின் தீவிர பக்தராக இருந்தார். இவரது பிரபலமான பாடல்களில் பெரும்பாலானவை, குஜராத்தில் உள்ள விரஜ் பகுதியில் வாழ்ந்த கிருஷ்ணரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை.
அவரது படைப்பான “வைஷ்ணவஜன தோ தேனே ரே கஹியே” (வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்) என்பது மகாத்மா காந்தியின் விருப்பமான பக்திப் பாடலாகும். இந்த பாடல் சமய பற்றுள்ள ஒருவரை, கருணை மற்றும் தார்மீக நேர்மையின் அடிப்படையில் வரையறுக்கிறது. மகாத்மா, இதனை வேதங்களுக்கு இணையாக கருதினார்.
நரசிங் மேத்தா குஜராத்தில் மிகவும் மதிக்கப்படும் கவிஞராக திகழ்கிறார். அவர் அப்பகுதியின் மிக முக்கியமான துறவி-கவிஞராகவும், குஜராத்தி மொழியின் முதல் ஆதிகவியாகவும் போற்றப்படுகிறார். குஜராத்தி கவிதைக்கான ஒரு மதிப்புமிக்க விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது; ஏரிகளுக்கும் மற்றும் சாலைகளுக்கும் கூட அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது; மேலும் குஜராத்தின் முக்கிய நகரங்களில் பக்திப் பாடல்களைப் பாடும் கோலத்தில் அவரது சிலைகள் காணப்படுகின்றன. இந்தப் படம், நரசிங் மேத்தாவின் படைப்புகளைக் கொண்ட 17 -ம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதி ஆகும்.
ஆதாரம் மற்றும் பட உதவி: குஜராத்தின் நரசிங் மேத்தா, எடுத்தவர் நீலிமா சுக்லா – பட்