153

விஜயநகரம் —நாம் மறந்த பேரரசு.

கிபி 14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களால் அழிக்கப்பட்ட பண்டைய தென்னிந்திய அரசுகளின்மீது உருவானதுதான் விஜயநகர சாம்ராஜ்யம். முந்தைய காகதீய, காம்பிளி (Kakatiya and Kampili) அரசுக்கு சேவை செய்த சங்கம வம்ஸ சகோதரர்களான புக்கா ராயன் மற்றும் ஹரிஹர ராயனால் (Bukka and Harihara) உருவாக்கப் பட்டதே விஜயநகர பேரரசு. இரண்டு நூற்றாண்டுகளுக்கு கோலோச்சிய விஜயநகர சாம்ராஜம், தென்னிந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நேர்த்தியாகவும் ஆழமாகவும் வடிவமைத்தது.

‘மிகப் பெரிய நிலப்பரப்பையும், படைபலத்தையும் கொண்ட, 16-ம் நூற்றாண்டின் இரு பெரும் அரசர்கள்’ என ராணா சங்காவையும், விஜயநகர அரசரையும் பாபர் குறிப்பிடுகிறார். கர்நாடகாவிற்கு மட்டுமே சொந்தமாக இல்லாவிட்டால்கூட அங்குள்ள ஹம்பிதான் (Hampi) விஜயநகர பேரரசர்களின் தலைநகரமாக விளங்கியது.

கர்நாடக தினமான இன்று, ‘மறக்கப்பட்டப் பேரரசு’ என வரலாற்று ஆசிரியர் ராபர்ட் செவல் (Robert Sewell) குறிப்பிட்ட விஜயநகரப் பேரரசின் சில அறியப்படாத தகவல்களைப் பார்க்கலாமா?

இந்த வினாடி வினாவை, கான்பூர் IIT-யில் கணிணி அறிவியல் மற்றும் இந்திய அறிவு அமைப்புகள் (Computer Science and Indian Knowledge Systems) பற்றி முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் இளம் வரலாற்று ஆர்வலர் ஸ்ரீநிதி தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜயநகர ஆர்வலர்கள் கூடுதலாக (bonus) சில கேள்விகளுக்கும் விடையளிக்கலாம்.

சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட ஒரு மடத்தின் தலைமையே விஜயநகர சாம்ராஜ்யம் அமைய ஊக்குவிப்பாக இருந்தது. அது எந்த மடம்?

எந்த பிரசித்திபெற்ற கர்நாடக இசைக்கலைஞரை விஜயநகர பேரரசு ஆதரித்தது?

விஜயநகர அரசவையில் ஒரு பண்டிதர் வேதங்களை தன் உரைநடைகளுடன் புதுப்பித்தார். அவர் யார்?

விஜயநகர அரசர்களால் மீட்கப்பட்ட, இந்தியாவின் மிகப்பிரசித்தி பெற்ற தேவியின் கோயில் ஒன்று, கங்காதேவியின் கவிதைகளிலும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கோயில் எங்குள்ளது?

தென்னிந்தியாவின் பெரும் நிலப்பகுதி விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டிருந்தது. அதன் மிகவும் புகழ்பெற்ற மன்னரான கிருஷ்ணதேவராயர் ஒரு பன்மொழி வித்தகர். “அமுக்தமால்யதா” எனும் பிரசித்தி பெற்ற கவிதையை அவர் எந்த மொழியில் இயற்றினார்?

விஜயநகர பேரரசு போலவே அதற்கு முந்தய எந்த தக்ஷிண பேரரசின் சின்னத்திலும் வராஹம் (பன்றி) பொறிக்கப்பட்டிருந்தது?

எந்த தெய்வத்தின் பேரில் விஜயநகர பேரரசின் அரசாணைகள் கையெழுத்திடப்பட்டன?

சிதிலடைந்த விஜய விட்டல கோயிலில் உள்ள பிரசித்திபெற்ற ரத கற்சிற்பம் கீழ்க்காணும் எதில் குறிக்கப்பட்டுள்ளது?

விஜயநகரத்தின் பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் மைசூர் அரண்மனையில் எந்தப்பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது?

1537-ம் ஆண்டு, விஜயநகர மன்னரான அச்சுததேவராயர் நன்கொடையாக அளித்த 12 கிராமங்களே இப்போதைய பெங்களூராக மாறின. யார் அந்த நன்கொடையைப் பெற்றார்?

விஜயநகர பேரரசு அளித்த குறு நிலத்தை வாங்கிய கிழக்கிந்திய கம்பெனி, பிற்காலத்தில் அதனை மிகப் பெரிய நகரமாக மாற்றியது. அது, எந்த நகரம்?

விஜயநகர பேரரசு யார் படையெடுப்பால் அழிந்தது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In