132

ஆயுர்வேதா என்றால் என்ன? – புதிர்

ஜூன் 21 உலக யோகா தினம். யோகா என்றால் ‘சேர்வது’ அல்லது ‘ஒன்றிணைவது’ என்று பொருள். இந்த ஒன்றிணைவு வெறும் உடற்பயிற்சி அல்லது வளைந்து உடல் பாகங்களைத் தொடுவது அல்ல. யோகாவின் நோக்கம், மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒன்றிணைப்பதாகும். ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு, இது ஒரு மிக விரிவான அணுகுமுறை.

ஆயுர்வேதமும் நல்வாழ்வுக்கு ஒரு விரிவான அணுகுமுறையாகும். இதுவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உடல் , மனம் மற்றும் ஆன்மீக அம்சங்களைக் குறிக்கிறது. ஆரோக்கியமான நல்வாழ்வுக்காக யோகாவும் ஆயுர்வேதமும் எப்போதும் ஒன்றாகவே சேர்த்து பயிற்சி செய்யப் படுகின்றன.

இந்த புதிரில், ஆயுர்வேதத்தைப் பற்றி ஆராய்வோம் — ஆயுர்வேதம் என்றால் என்ன? பண்டைக்கால ஆயுர்வேத வித்தகர்கள் யார்? ஒரு நபரின் நல்வாழ்வை தீர்மானிக்கும் மூன்று தோஷங்கள் (உடல்நல குறைபாடுகள்) யாவை?

இந்த புதிருக்கு சரியான விடையாளிக்கும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு விவேக் தேப்ராய் (Bibek Debroy) எழுதிய “மில்லெனியல்களுக்கான பகவத் கீதை” (Bhagavad Gita for Millennials) என்ற ஆங்கிலப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

ஆயுர்வேததில் “ஆயுர்” என்பதன் பொருள் என்ன?

ஆயுர்வேதா என்பது வேத இலக்கியத்தின் ஒரு பகுதியாகும். அது எந்த வகையைச் சார்ந்தது?

“……………… சம்ஹிதா” என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிக முக்கியமான இந்திய மருத்துவ ஆய்வுக் கட்டுரை. இது அதை எழுதியவர் பெயரிலயே அறியப்படுகிறது. எழுதியவர் யார்?

சுஷ்ருதர் மருத்துவத்தில் எந்த துறையின் தந்தை என கருத்தப்படுகிறார்?

ஆயுர்வேதம் பண்டைய பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டது. சுஷ்ருதர் அறுவை சிகிச்சை பள்ளி (Sushruta School of Surgery) காசி பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையது. சரகர் மருத்துவப் பள்ளி / Charaka School of Medicine (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) எந்த பண்டைய பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையது?

ஐ-ட்ஸிங்க் அதிகம் அறியப்படாத கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் சீன யாத்ரீகர். அவர் புராதான மருத்துவத்தின் மூன்றாவ்து முக்கிய நபருடைய தொழிலுடன் தொடர்புடையவர். யார் அந்த முக்கிய நபர்?

ஆயுர்வேதம், யதார்த்த (உண்மைநிலை), அணுக்கூறுகளாலான மற்றும் உடல்-ஆன்மா ஆகிய இரட்டை நிலையே இந்த பிரபஞ்சம்‌ எனும் முக்கிய இந்திய தத்துவஞானத்திலிருந்து பெறப்பட்டது. இந்த தத்துவத்தின் பெயரென்ன?

ஆயுர்வேதம் மூன்று தோஷகங்களின் (குறைபாடுகள்) சமமின்மையே நோய்க்கு காரணம் என்கிறது. அவை எவை?

1890-ல் கண்டெடுக்கப்பட்ட போவர் கையெழுத்துப் பிரதி (Bower Manuscript) ஆயுர்வேதத்தின் சரித்திரத்தை பறைசாற்றுகிறது. முற்றும் சாத்தியமில்லாத எந்தப் பகுதியில் அது கண்டுபிடிக்கப் பட்டது?

இந்திய மருத்துவ தாவரங்கள் பற்றிய தகவல்களை, கார்சியா டி ஓர்ட்டா (Garcia de Orta) என்ற ஐரோப்பியரே முதலில் முறையாக வகைப்படுத்தி சேகரித்தார். அவர் எந்த நகரில் வசித்தார்?

அரேபிய “அட்ரிஃபால்” (Atriphal) மற்றும் சீனாவின் “சாங்-டெங்க்” (sang-teng) ஆகியவை இந்தியாவின் எந்த பிரபலமான மருந்தின் பெயர்?

“பஞ்சகர்மா” எனப்படும் ஒரு பொதுவான ஆயுர்வேத செயல்முறை உடம்பில் என்ன செய்கிறது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In